முன்னாள் சிரேஷ்ட காவற்துறை மா அதிபர் விபத்தில் பலி!
Saturday, August 19th, 2017
காவற்துறை சிறப்பு படையணியின் முதலாவது கட்டளைத் தளபதியும் முன்னாள் சிரேஷ்ட காவற்துறை மா அதிபர் போதி லியனகே திடீர் விபத்தில் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மூளையின் நரம்பொன்று வெடித்துள்ள நிலையில், மாடிப்படியில் இருந்து வீழ்ந்த அவர் கண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் , இரண்டு தினங்கள் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று அதிகாலை உயிரிழந்ததாக காவற்துறை ஊடக பேச்சாளர் ஒருவர் மேலும் தெரிவித்திருந்தார்.அவரின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(20) கண்டி ,கடுகஸ்தொடவில் இடம்பெறவுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
விளையாட்டு அரங்கு, உடற்பயிற்சி மத்திய நிலையங்கள் பதிவு செய்யப்பட வேண்டும் - அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ...
மேலும் ஒரு தொகுதி நனோ நைட்ரஜன் திரவ உரம் இலங்கை வந்தடைந்தது!
சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுக்கள் ஆரம்பம் - அடுத்த வாரம் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகளு...
|
|
|


