முதல் தடவையாக வீதிச் சோதனை கடமைகளில் பெண் காவல்துறை உத்தியோகத்தர்கள்!
Friday, May 26th, 2023இலங்கையில் முதல் தடவையாக 8 பெண் காவல்துறை உத்தியோகத்தர்கள் வாகன சோதனைகள் உள்ளிட்ட காவல்துறை போக்குவரத்து பிரிவு கடமைகளுக்காக இணைக்கப்பட்டுள்ளனர்.
பொலன்னறுவை சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் காரியாலய வளாகத்தில் கடந்த 24 ஆம்’ திகதியன்று பொலன்னறுவை பிரதேச சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஷாந்த சில்வா தலைமையில் இடம்பெற்றது.
இந்த 8 உத்தியோகத்தர்களும் பொலன்னறுவை காவல்துறையின் உந்துருளி மற்றும் வாகனப் பிரிவுகளில் கடமைகளுக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
வாகன சோதனைகள் மற்றும் போக்குவரத்து ஒழுங்குபடுத்து உள்ளிட்ட விடயங்களில் பயிற்சி பெற்ற இந்த பெண் காவல்துறை உத்தியோகத்தர்கள் கடந்த 24 ஆம் திகதிமுதல் உத்தியோகபூர்வமாக கடமைகளில் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
நடை பாதையில் உறங்கும் நோயாளர்கள் - இடப் பற்றாக்குறையால் வவுனியா வைத்தியசாலையில் அவலநிலை!
திரிபோஷா வழங்கலை ஊக்குவிப்பதற்கு இலங்கைக்கு ஆறு இலட்சம் அமெரிக்க டொலர் நிதியுதவி!
துப்பாக்கிகளை ஒப்படைக்க மார்ச் 15 வரை அவகாசம் - அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் கையளிக்க முடியும் - ...
|
|