முதல்முறையாக யாழ்ப்பாணத்தில்: இத்தனை கோடி பெறுமதியில் மாட்டிய பொருள்!

Wednesday, May 1st, 2019

யாழ்ப்பாணம் வடரமாட்சி, தொண்டமனாறு பகுதியில் சுமார் 2 கோடி ரூபா பெறுமதியான அபின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.

“வடமராட்சி தொண்டமனாறு – கெருடாவில் பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில் சந்தேகத்துக்கு இடமான இருவர் நடமாடியபோது, அவர்கள் பொலிஸார் வருவதைக் கண்டதும் பொதி ஒன்றை போட்டுவிட்டு தப்பியோடியுள்ளனர்.

இதையடுத்து குறித்த பொதியினை மீட்டெடுத்த பொலிஸார் அதிலிருந்து ஒன்றரைக் கிலோ கிரேம் அபின் போதைப்பொருளை மீட்டுள்ளனர் மீட்கப்பட்ட அபின் போதைப்பொருளின் பெறுமதி 2 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

Related posts: