முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைக்கும் கால எல்லை ஜுலை மாதம் 31 ஆம் திகதி வரை நீடிப்பு – கல்வி அமைச்சு அறிவிப்பு!
Wednesday, June 9th, 2021அடுத்த வருடம் முதலாம் தரத்துக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பப்படிவங்களை கையளிப்பதற்காக வழங்கப்பட்ட காலம் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
முன்பதாக எதிர்வரும் 30 ஆம் திகதியுடன் குறித்த காலம் நிறைவடையவிருந்தது. எனினும், தற்போதைய சூழ்நிலையை கருத்திற்கொண்டு, முதலாம் தரத்துக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பப்படிவங்களை கையளிப்பதற்கான காலத்தை எதிர்வரும் ஜுலை மாதம் 31 ஆம் திகதி வரை நீடித்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அதிகரித்த வெப்பநிலை; மக்கள் குடிநீர் பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளனர்!
வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் - ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல்!
ஆண்களுக்கு மசாஜ் கடமைகளில் ஆண்கள் மட்டுமே ஈடுபடும் வகையில் சட்டம் உருவாக்கப்படும் - ஆயுர்வேத ஆணையாளர...
|
|