முத­ல­மைச்­சர்­க­ளுக்கு இரண்டு மாதங்­க­ளுக்கு ஒரு தடவை அழைப்பு!

Friday, March 25th, 2016

மாகாண சபை முத­ல­மைச்­சர்­க­ளுக்கு இரண்டு மாதங்­க­ளுக்கு ஒரு தடவை அமைச்­ச­ரவை கூட்­டத்தில் கலந்து கொள்­வ­தற்­கான அழைப்பை விடுக்க ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறிசேன தீர்­மா­னித்­துள்ளார்.

ஜனா­தி­பதி செய­ல­கத்தில் நேற்று முன்­தினம்(23) இடம்­பெற்ற அமைச்­ச­ரவை கூட்­டத்தில் கலந்து கொண்ட முத­ல­மைச்­சர்­க­ளுக்கு ஜனா­தி­பதி இது தொடர்பில் அறி­விப்பு விடுத்துள்ளார்

மாகாண சபை­க­ளுக்கு நிதி ஒதுக்­கப்­ப­டு­வது தொடர்பில் எழுந்­துள்ள பிரச்­சி­னைகள் தொடர்­பாக பேச்சு வார்த்­தை­களை நடத்­தவே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அமைச்ச­ரவை கூட்­டத்தில் கலந்து கொள்­ளு­மாறு முத­ல­மைச்­சர்­க­ளுக்கு அழைப்பு விடுத்தி­ருந்தார்

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகியோர் இது விடயம் தொடர்பில் பேச்­சுக்­களை நடத்தி இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை முதலமைச்சர்களை அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைப்பதற்கு தீர்மானம் எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: