முச்சக்கர வண்டி மோதி விபத்து – நெல்லியடியில் ஒருவர் பலி!
Friday, December 14th, 2018யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியின் நெல்லியடி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
முச்சக்கர வண்டி ஒன்று துவிச்சக்கர வண்டி ஒன்றுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் அல்வாய் வடக்கு பகுதியை சேர்ந்த 50 வயதுடைய நபர் ஒருவர் பலத்த காயமடைந்த நிலையில் மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
தற்கொலை அங்கி மீட்பு: வடக்கின் படைக் குறைப்புக்கு தடையாகாது! - பாதுகாப்பு செயலாளர்
மழையுடனான வானிலையில் மேலும் அதிகரிக்கும் ௲ வானிலை அவதான நிலையம்!
கொரோனா அச்சுறுத்தல் - நாடாளுமன்ற அமர்வுகளை மட்டுப்படுத்த கட்சித் தலைவர்கள் இணக்கம்!
|
|