முச்சக்கர வண்டிகளின் மீற்றர் தொடர்பான சட்டமூலம் விரைவில்!
Saturday, September 3rd, 2016
நாட்டில் முச்சக்கர வண்டிகளில் பொருத்தப்பட்டுள்ள மீற்றருக்காக நிலையான அமைப்பு முறை ஒன்று இல்லாமையினால் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளதாக அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகளின் சங்கம் கூறியுள்ளது.
இதன் காரணமாக பொது மக்களிடம் பணம் பெறும் போது மோசடிகள் இடம்பெறுவதாக அந்த சங்கத்தின் செயலாளர் ஆர். பல்லி கூறியுள்ளார். இந்த திட்டத்திற்காக அரசு கொண்டுவந்த சட்டமூலம் இதுவரை செயல்படுத்தப்படவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் நுவன் வணிகரட்னவிடம் அத தெரண வினவியதற்கு, இது தொடர்பில் அதிகளவான முறைப்பாடுகள் கிடைத்திருப்பதனால், அந்த சட்டமூலத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

Related posts:
காங்கேசன் சீமேந்து ஆலை அங்கிருந்து அகற்றப்படும் - பிரதமர் ரணில்!
பொசன் போய தினத்தை முன்னிட்டு புலிகள் அமைப்பின் 17 உறுப்பினர்களுக்கு விடுதலை ஜனாதிபதி கோட்டாபய பொதுமன...
இறக்குமதி செய்யப்பட்டுள்ள சமையல் எரிவாயுவின் தரம் குறித்து ஆராய நடவடிக்கை - இராஜாங்க அமைச்சர் லசந்த ...
|
|
|


