மீள் நிரப்பு நிலையங்களில் மேலதிகமாக எரிபொருள்: தாங்கி ஊர்திகள் திருப்பி அனுப்பப்பட்டன – வலுசக்தி அமைச்சர் சுட்டிக்காட்டு!

Friday, March 25th, 2022

எரிபொருள் நிரப்பு நிலையங்களில், எரிபொருள் மேலதிகமாக உள்ளமையால், சில எரிபொருள் தாங்கி ஊர்திகள் மீளத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், மற்றுமொரு கப்பலில் இருந்து, முத்துராஜவளையில் பெற்றோலை தரையிறக்கும் பணிகள் இடம்பெறுவதாக குறிப்பிட்டார்.

டீசல் கப்பலொன்று வந்துள்ள நிலையில், அந்த டீசலை கொலன்னாவையில் தரையிறக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இந்தியாவிலிருந்து மற்றுமொரு எரிபொருள் கப்பல் எதிர்வரும் முதலாம் திகதி நாட்டுக்கு வரவுள்ளது.

இதேநேரம், கொழும்பின் சில பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில், எரிபொருள் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளமையால், எரிபொருள் தாங்கிகள் இவ்வாறு மீளத் திரும்பியதாக அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஆராய்ந்த போது பதிலளித்த இலங்கை பெற்றோலிய களஞ்சியங்கள் முனைய நிறுவனத்தின் முகாமையாளர், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு சென்ற சில பெட்ரோல் தாங்கிகள், இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டதாக குறிப்பிட்டார்.

000

Related posts: