மீனவர்களைத்  தாக்கவில்லை –  இலங்கை கடற்படை மறுப்பு!

Monday, October 3rd, 2016

கச்சத்தீவுக்கு அருகில், தம்மை தாக்கியதாக இந்திய மீனவர்கள் தெரிவித்த குற்றச்சாட்டை இலங்கை கடற்படையினர் மறுத்துள்ளனர்.

நேற்று இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் குழுவொன்று தாக்கப்பட்டதாக, அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியாகியிருந்தன. மேலும், இந்த தாக்குதலால் பெருமளவான படகுகளுக்கு சேதம் ஏற்பட்டதாகவும் அதில் கூறப்பட்டது.

இந்தநிலையில், இந்தியாவுக்கு சொந்தமான மீன்பிடி வலயத்தினுள் தொழிலில் ஈடுபடுவதை தாம் ஒருபோதும் தடுக்கவில்லை என, இது குறித்து அத தெரண வினவியபோது, இலங்கை கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக பிரவேசிப்பவர்களை கைதுசெய்ய முடியும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.  எதுஎவ்வாறு இருப்பினும், கச்சத்தீவுக்கு அருகில் இந்திய மீனவர்கள் தாக்கப்பட்டதாக கூறப்படுவது முற்றாக தவறானது என இலங்கை கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.

 1582859810firshmen3

Related posts: