மீண்டும் டெங்கு அபாயம் அதிகரிப்பு – தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு கடும் எச்சரிக்கை!

Tuesday, June 13th, 2023

சில மாவட்டங்களில் மீண்டும் டெங்கு அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டில் டெங்கு நோயால் பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு, கண்டி, குருணாகல், புத்தளம், காலி மாவட்டங்களில் மீண்டும் டெங்கு காய்ச்சல் அபாயம் அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் நாட்களில் மழையுடனான வானிலையுடன் இந்த நிலைலை அதிகரிக்கக்கூடும் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் நளின் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 43 ஆயிரத்து 346 பேர் டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

அவர்களில் 21 ஆயிரத்து 654 பேர் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் நளின் ஆரியரத்ன கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: