மியன்மார் அகதிகள் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் ஒப்படைப்பு!
Tuesday, December 20th, 2022யாழ்.மருதங்கேணி கடற்பரப்பில் தத்தளித்து இலங்கை கடற்படையால் காப்பாற்றப்பட்ட 104 பேரும் யாழ். சிறைச்சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று திங்கட்கிழமை காங்கேசன்துறை கடற்படை முகாமில் இருந்து 104 பேரும் இரண்டு பேருந்துகளில் யாழ். சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டனர்.
இவர்கள் இந்தோனேசியாவிற்கு தப்பிச் செல்லும் நோக்கில் படகு மூலம் சட்ட விரோதமாக பயணித்தபோதே நடுக்கடலில் படகு பழுதடைந்து நடுக்கடலில் தத்தளித்தனர்.
இவ்வாறு சட்ட விரோதமாக சென்றவர்கள் டிசம்பர் 17 ஆம் திகதி இலங்கை கடற்படையினரால் காப்பாற்றப்பட்டு படகு மூலம் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு வரப்பட்டு மருத்துவ பரிசோதணைகளின் பின்னர் அங்கு தங்கவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.
Related posts:
GSP பிளஸ் வரிச்சலுகையால் 1400 உற்பத்திகளுக்கு சந்தை வாய்ப்பு!
அடுத்த வருடம் முதல் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம்!
இலங்கையின் நிலவும் பொருளாதார நெருக்கடி குறித்து உலக வங்கி கவலை!
|
|