மின் விநியோகத் தடை தொடரும் – மின்சக்தி அமைச்சு அறிவிப்பு!

நாடளாவிய ரீதியில் நாளொன்றில் சுமார் 45 நிமிடங்கள் மின் விநியோகத் தடை ஏற்படுமென மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மின்பிறப்பாக்கியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் மின்பிறப்பாக்கி புனரமைக்கப்படும் வரை இன்னும் சில நாட்களுக்கு நாளாந்த மின் துண்டிப்பு தொடரும் எனவும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, ஒவ்வொரு நாளும் மாலை 6 மணிமுதல் இரவு 9.30 மணிவரை மின் விநியோகத் தடை ஏற்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மீண்டும் யுத்தத்திற்கு வழிகோலும் இனவாத மதக் குழுக்கள் இருப்பது துரதிஸ்டம் - அமைச்சர் அர்ஜூன ரணதுங்க!
சர்வதேச மகளிர் தினம் இன்று!
மோட்டார் போக்குவரத்து துறை அறிமுகப்படுத்தியுள்ள 7 புதிய மாற்றங்கள் - அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவி...
|
|