கலால் திணக்களத்தின் வருமானம் 400% உயர்வு!

Saturday, April 8th, 2017

நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க  பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில் கடந்த ஆண்டில் அரசாங்கம் பத்தாயிரத்து 800 கோடி ரூபாவை கலால் திணக்களம் வருமானமாக பெற்றதாக  தெரிவிதுள்ளார்.

கடந்த அரசாங்கம் மூவாயிரத்து 500 கோடி ரூபாவை மாத்திரமே கலால் வருமானமாக ஈட்டியதாகவும் அவர் கூறினார். கடந்த அரசாங்கத்துடன் ஒப்பிடும் போது இந்த வருமானம் 400 சதவீததால் அதிகரித்துள்ளது. அரசாங்கத்தின் மொத்த தேசிய உற்பத்தி பத்து தசம் மூன்று சதவீதத்தில் இருந்து 14 சதவீதமாக அதிகரித்துள்ளது.

பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயற்படுவது அரசாங்கத்தின் இலக்காகும் என்றும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க சுட்டிக்காட்டினார்

Related posts:

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்த வேண்டாம் - பொலிஸாருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப...
தேர்தல் மற்றும் தேர்தல் கட்டமைப்பில் திருத்தம் - நாடாளுமன்ற சிறப்புக்குழுவின் பரிந்துரைகளை அமுலாக்க ...
தேர்தல் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு இதுவரை திறைசேரியிலிருந்து பதில் கிடைக்கவில்லை - தேர்தல்கள் ஆணைக்க...