மின்னல் தாக்கி 17 வயது சிறுவன் பலி – விசுவமடு தொட்டியடியில் துயரம்!
Saturday, April 20th, 2019முல்லைத்தீவு – விசுவமடு தொட்டியடி பகுதியில் நேற்று பிற்பகல் மின்னல் தாக்கியதில் 17 வயது பாடசாலை மாணவன் உயிரிழந்துள்ளார்.
மழைக்காக நாவல் மரத்தின் கீழ் ஒதுங்கி நின்ற நிலையில், மரத்தின் மீது விழுந்த மின்னல் சிறுவார்கள் மீது தாக்கியுள்ளது.
சம்பவத்தில் தர்மபாலசிங்கம் தயானந்தன் (வயது-17) என்ற பாடசாலை சிறுவனே உயிரிழந்துள்ளான்.மேலும் எஸ்.கிருஷாந்தன் என்ற சிறுவன் காயமடைந்துள்ளான்.
உயிரிழந்தவரின் சடலம்தற்போது கிளிநொச்சி, தர்மபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
Related posts:
கொடிகாமத்தில் 30 பேருக்கு திடீர் கொரோனா பரிசோதனை !
யாழ்ப்பாணத்திலும் தீவிரமடையும் கொரோனா - 10 வயது சிறுமியும் பாதிப்பு – வடக்கின் பல பகுதிகளிலும் எச்ச...
அபாய வலயமாக மாறிவரும் அரச நிறுவனங்கள் - மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரால் விடுக்...
|
|