மின்சார முறைப்பாடுகளை தெரிவிக்க விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம் – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவிப்பு!

Wednesday, June 23rd, 2021

மின்சார முறைபாடுகள் குறித்து விசாரித்து தீர்வு காணும்வகையில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அவசர தொலைபேசி இலக்கமொன்றை  அறிமுகப்படுத்தியுள்ளது.

நாட்டில்  நிலவும் கொரோனா பிரச்சினை காரணமாக மின்சார பாவனையாளர்கள் முறைபாடுகளை தெரிவிக்கும் முகமாக 0775 687 387 என்ற அவசர தொலைபேசி இலக்கம் ஊடாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினை தொடர்புகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இலக்கத்தினூடாக வாட்ஸ்அப், வைபர் மற்றும் இமோ மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம் என்றும் இலங்கை பொதுப் பயன்பாடுகள்  ஆணைக்குழு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநெரம் பாவனையாளர்கள் தங்கள் எழுத்து மூலமான முறைப்பாடுகளை ஒரு புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தின் ஊடாக பதிவேற்றுவதன் மூலம் அல்லது குறுந்தகவலாக டைப் செய்து சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

குறுகிய காலத்தில் சிறப்பான சேவையை பெற்றுக்கொடுப்பதற்கு பெயர், முகவரி, தொலைப்பேசி இலக்கம் மற்றும் மின்னஞ்சல் முகவரி, மின்சார கணக்கு இலக்கம், முறைப்பாடு விபரம், தொடர்புடைய இணைப்புகள் ஆகியவற்றை குறிப்பிடுமாறு பாவனையாளர்கள் தயவுசெய்து அறிவுறுத்தப்படுகிறார்கள்.

முறைப்பாடு சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், குறிப்பு இலக்கமொன்று பாவனையாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். விசாரணைகள் தொடர்பில் கேட்டறியவும், முறைப்பாடுகளை தாக்கல் செய்யும் போது ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், பாவனையாளர் மேற்படி இலக்கத்தின் ஊடாக ஒரு அதிகாரியை தொடர்பு கொள்ளலாம். அதற்கமைய அதிகாரிகளை நேரில் சந்திப்பதை தவிர்த்து ஒன்லைன் மற்றும் சமூக வலைத் தளங்கள் ஊடாக அதிகாரிகளை தொடர்புகொள்ளுமாறு பொதுமக்களும், ஏனைய பங்குதாரர்களும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

இச்சேவைக்கு மேலதிகமாக, பொதுமக்கள் மற்றும் பங்குதாரர்கள் 0112392607 அல்லது 0112392608 என்ற தொலைப்பேசி இலக்கங்கள் மற்றும் info@pucsl.gov.lk அல்லது customers@pucsl.gov.lk  அல்லது www.facebook.com/pucsl ஊடாகஇலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவை தொடர்புகொள்ளலாம் என்றும் குறித்த அறஙிக்கயைில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: