மின்சார அலகுகளின் பாவனை 20 வீதத்தினால் குறைவடைந்துள்ளது – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டு!
Thursday, August 4th, 2022இலங்கையில் மின்சார அலகுகளின் பாவனை 20 வீதத்தினால் குறைவடைந்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
சுமார் 06 மாதங்களுக்கு முன்னர் மின் பாவனையாளர்கள் நாளொன்றுக்கு 48 மில்லியன் அலகுகள் மின்சாரத்தை பயன்படுத்தி வந்த போதிலும், தற்போது 38 மில்லியனாக குறைவடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பல மாதங்களாக நிலவும் மின்வெட்டு மற்றும் நுகர்வோரின் குறைந்தளவான மின்பாவனையே இதற்குக் காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
வடக்கில் தெற்கு மக்களுக்கு இடமில்லை – அமைச்சர் ராஜித!
இலங்கையில் இதுவரை 95 ஆயிரம் பேருக்கு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன - சுகாதார அமைச்சின் தொற்று நோய் வி...
சதொச விற்பனையகங்கள் ஊடாக ஆறு அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை!
|
|