மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் தலைமையில் கூட்டம் – ரயில்கள் மூலம் எரிபொருள் விநியோகத்தை விரிவுபடுத்த நடவடிக்கை!
Tuesday, May 3rd, 2022ரயில்கள் ஊடாக எரிபொருள் விநியோகத்தை விரிவுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாளாந்தம் 05 மில்லியன் லீற்றர் எரிபொருளை புகையிரதத்தின் ஊடாக விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளரான தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
தற்போது நாளாந்தம் 3.4 மில்லியன் லீற்றர் எரிபொருள் ரயில்கள் மூலம் விநியோகிக்கப் படுகிறது.
ரயில்கள் மூலம் எரிபொருள் விநியோகத்தை விரிவுபடுத்துவது தொடர்பாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் தலைமையில் இன்று கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
ரயில் என்ஜின் சாரதிகள் பணிப்புறக்கணிப்பு!
குடிபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் விசேட நடவடிக்கை முன்னெடுப்பு - பிரதி பொலிஸ்மா ...
தீபாவளி கொத்தணியொன்றை உருவாக்க வழிவகை செய்யாதீர் – வடக்கு மக்களிடம் சுகாதார பணிப்பாளர் வலியுறுத்து!
|
|