மினுவாங்கொடை கொத்தணியில் மேலும் 61 பேருக்கு கொரோனா உறுதி – இராணுவ தளபதி தெரிவிப்பு!

Friday, October 16th, 2020

மினுவாங்கொடை கொத்தணியில் மேலும் 61 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளதாக இராணுவத்தளபதி லெப்டினன் ஜென்ரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அவர்களில் 3 பேர் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் இருந்த நிலையிலும், ஏனைய 58 பேரும் அவர்களுடன் தொடர்புடையவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, மினுவாங்கொடை கொத்தணியில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 850 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன் நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியான மேலும் 05 பேர் இன்று குணமடைந்துள்ளனர். இதற்கமைய கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை மூவாயிரத்து 385 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: