மிகவேகமாக பரவி வரும் ஆட்கொல்லி நோய் – மக்களுக்கு எச்சரிக்கை!

Tuesday, July 23rd, 2019

நாட்டில் எயிட்ஸ் ஆட்கொல்லி நோய்க்கு நிகரான மற்றொரு நோய் ஒன்று மிகவேகமாக பரவி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

HIV எயிட்ஸ் நோய்க்கு சமமான Hepatitis B என்ற நோயே இவ்வாறு வேகமாக பரவி வருவதாக செரிமான மற்றும் கல்லீரல் நோய்கள் தொடர்பான விசேட வைத்தியர் தெரிவித்துள்ளார்.

இந்த நோயானது 20 – 40 வயதுடைய ஆண் மற்றும் பெண்களை அதிகமாக தாக்குதவதற்கான ஆபத்துக்கள் உள்ளதாகவும், எச்சரிக்கப்பட்டுள்ளது.

பாலியல் தொழிலாளர்கள் மற்றும் ஆண்கள் சிலரினால் இந்த நோய் தொற்று சமூகத்தில் பரப்பப்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஹெப்படைட்டிஸ் பீ நோய் தாயிடம் இருந்து பிள்ளைக்கும், போதைப்பொருளை ஊசி மூலம் பயன்படுத்துவதினாலும், தொற்றுக்குள்ளானவரின் இரத்தத்தை பயன்படுத்துவது போன்ற நடவடிக்கைகளின் காரணமாக பரவுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த நோய் வராமல் பாதுகாத்து கொள்வதற்கு ஹெப்படைட்டிஸ் பீ என்ற ஊசியை பெற்றுக்கொள்வது அவசியம் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த ஊசியை அரச வைத்தியசாலைகளில் இலகுவாக பெற்று கொள்ள முடியும் என்றும், எனவே குறித்த ஊசியை கட்டாயம் பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் விசேட வைத்தியர் ஆலோசனை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: