மாலைதீவில் சுகாதார அமைச்சர்கள் மாநாடு!

Tuesday, September 5th, 2017

உலக சுகாதார ஸ்தாபனத்தின் தெற்கு மற்றும் கிழக்காசிய சுகாதார அமைச்சர்கள் பங்கேற்கும் 70 ஆவது அமர்வு நாளை மாலைதீவு தலைநகரில் ஆரம்பமாகி 11 ஆம் திகதி நிறைவடையவுள்ளது.

இந்த அமர்விற்கு இலங்கை சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தலைமை தாங்குவார். அவர் தலைமைப் பொறுப்பை மாலைதீவு சுகாதார அமைச்சர் அப்துல் ரஹிம் இப்ரஹிமிடம் கையளிப்பார். மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் இன்று இலங்கையிலிருந்து புறப்படுகிறார்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் தெற்கு மற்றும் கிழக்காசிய நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் பங்கேற்ற 66 ஆவது மாநாடு கடந்தாண்டு இலங்கையில் இடம்பெற்றது. இம்முறை தொற்றாநோய்கள், சுவாத்திய மாற்றம் முதலான விடயங்கள் பற்றி கூடுதல் கவனம் செலுத்தப்படும்.

Related posts: