மார்ச் முதலாம் திகதி தொடக்கம் நாடளாவிய ரீதியில் 4,000 மத்திய நிலையங்களில் COVID – 19 தடுப்பூசியை செலுத்துவதற்கு நடவடிக்கை – இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே அறிவிப்பு!

Monday, February 8th, 2021

மார்ச் முதலாம் திகதி தொடக்கம் நாடளாவிய ரீதியில் 4,000 மத்திய நிலையங்களில் COVID – 19 தடுப்பூசியை செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொரோனா ஒழிப்பு தொடர்பான இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

அத்துடன் 30 தொடக்கம் 60 வயதுக்கிடைப்பட்ட தொழில் செய்யும் அனைத்து பிரஜைகளுக்கும் COVID – 19 தடுப்பூசி ஏற்றப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

சுகாதார அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, 60 வயதிக்கு மேற்பட்டோருக்கும் COVID – 19 தடுப்பூசியை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தற்போது திட்டமிடப்பட்டுள்ள 4,000 மத்திய நிலையங்களில் நாளாந்தம் 300 பேருக்கு தடுப்பூசி ஏற்றவும் திட்டமிடப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே கூறியுள்ளார்.

அதற்கமைய நாளாந்தம் சுமார் 6 இலட்சம் பேருக்கு COVID – 19 தடுப்பூசியை ஏற்ற முடியும் என எதிர்பார்ப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts: