மாணவி வித்தியா படுகொலை சந்தேகநபர்களுக்குப் பிணை வழங்க மறுத்த யாழ். மேல் நீதிமன்றம்!
Wednesday, August 10th, 2016
யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியாவின் வன்புணர்வுக்குட்படுத்துப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் ஒன்பது சந்தேக நபர்களுக்கும் யாழ். மேல் நீதிமன்றத்தால் பிணை வழங்க மறுக்கப்பட்டுள்ளதுடன், குறித்த வழக்கின் விசாரணை எதிர்வரும் மூன்று மாதகாலத்திற்கு ஒத்தி வைத்தும் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் இன்று (10) உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இன்றைய தினம் குறித்த வழக்கு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் முன்னிலையில் இரண்டாம் கட்டமாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது சந்தேகநபர்கள் பிணை கோரித் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் கட்ட விசாரணை 09.11.2016 அன்று இடம்பெறும் என இதன் போது நீதவானால் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் -13 ஆம் திகதி குறித்த மாணவி பாடசாலைக்குச் சென்று விட்டு மீண்டும் வீடு நோக்கித் திரும்பிக் கொண்டிருந்த போது கூட்டு வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார். குறித்த வழக்கின் விசாரணை கடந்த ஒரு வருட காலமாக ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகிறது.
கடந்த மே மாதம்- 11ஆம் திகதி யாழ். மேல் நீதிமன்றத்தில் குறித்த வழக்கு விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போது மூன்று மாதங்கள் வரை சந்தேகநபர்கள் மீதான விசாரணையைத் தொடர்வதற்கு காலநீடிப்புச் செய்து மா.இளஞ்செழியன் உத்தரவிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|