மாணவிகள் துஷ்பிரயோகம்: பெரியபுலவு மகா வித்தியாலய பாடசாலை சூழலில் பதற்றம்!
Wednesday, June 22nd, 2016யாழ்ப்பாணம் பெரியபுலம் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர், அந்தப் பாடசாலையில் கல்விகற்கும் மாணவிகள் ஐவரைப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் சம்பவத்தைக் கண்டித்து பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களால் இன்று (22) ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படுகின்றது.
குறித்த ஆர்ப்பாட்டத்தால் பாடசாலைச் சூழலில் பதற்றம் நிலவுகின்றது. இதனையடுத்து, கலகம் அடக்கும் பொலிஸார் அதிகளவில் குவிக்கப்பட்டு, நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
Related posts:
இலங்கையின் பொருளாதார ரீதியான வளர்ச்சிக்கு இந்தியா தொடர்ந்தும் உதவும்: யாழ். இந்தியத் துணைத் தூதுவர் ...
டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையே தமிழ் மக்களுக்கான நிரந்தர தீர்வைப் பெற்றுத்தரும் - E.P.D.P. யின் முல்ல...
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு அத்தியாவசிய பொருட்கள் சாதாரண விலையில்!
|
|