மஹிந்த மாமாவிடம் நீதி கோரி யாழ். பொம்மைவெளியில் போராட்டம்!

Sunday, September 13th, 2020

பொம்மைவெளி பகுதியில் நீண்ட காலமாக மீளகுடி  அமர்ந்திருக்கும முஸ்லிம் மக்கள் தங்களுடைய வீட்டு திட்டத்தை உடனடியாக நிவர்த்தி செய்து தர வேண்டும் என கோரி இன்று காலை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொம்மைவெளி பகுதியில் நீண்ட காலமாக மீளகுடி  அமர்ந்திருக்கும முஸ்லிம் மக்கள் தாங்கள் தொடர்ந்து பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதாக குறிப்பிட்டனர்.குறிப்பாக அடிப்படை வசதிகளான குடிநீர்,மலசலகூடம் சீரில்லாத நிலமை காணப்படுவதுடன் மழை,அதிக வெயில் காலங்களில் இந்த குடிசைகளுக்குள் தாம் பல இன்னல்களை எதிர்நோக்குவதாக தெரிவித்தனர்.

மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் “ குடி நீர் வசதி செய்து தரப்பட வேண்டும்”,மகிந்த மாமா எங்களுக்கு வீடு கட்டி தரமாட்டிங்களா?,”உடைக்கப்பட்ட எமது வீடுகள் எங்கே?,”எம்மை மழை வெள்ளத்தில் இருந்து காப்பாற்றுங்கள்” போன்ற பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related posts:


நல்லூர் பிரதேசத்தை சேர்ந்த மாற்றுத் திறனாளி ஒருவருக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரால் சக்கர நாற்கால...
கொரோனாவிற்கு மத்தியில் மலேரியாவை முற்றுமுழுதாக இல்லாதொழிக்கும் மருந்து கண்டுபிடிப்பு!
இந்திய மீன்பிடி படகுகளை ஏலத்தில் விடுவதற்கு அல்லது விற்பனை செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக...