மழை பொய்த்ததால் விவசாயிகள் ஏமாற்றம்!

மழை இன்மையால் பல வயல் காணிகளில் நெற்செய்கை மேற்கொள்ளப்படவில்லை என வவுனியா மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
நெற்செய்கையை மேற்கொள்ளவிருந்த விவசாயிகள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தற்போது பெய்யும் மழையால் நெற்செய்கை செய்ய முடியாது. புழுதிச் செய்கை மட்டுமே மேற்கொள்ளப்படுகின்றது. பலகை நெற்செய்கை மேற்கொள்ள மழை போதாதுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு மழை ஏமாற்றிவிட்டது. நவம்பர் மாதம் வழமையாக பசளையிட்டு மருந்து விசப்படும். இந்தமுறை வயல்களில் இன்னமும் விதைப்பே நடக்கவில்லை – என்று விவசாயிகள் தெரிவித்தனர்.
Related posts:
இலங்கையின் அபிவிருத்திக்கு மீண்டும் சீனா உதவி!
பொதுமக்கள் ஒன்று கூடுவதை தடுக்க யாழ் வர்த்தக சங்கம் விஷேட திட்டம் - வீடுகளில் இருந்து பொருட் கொள்வன...
பயங்கரவாதத்துக்கு எதிரான போரை வெற்றிக்கொள்ள நாம் அனைவரும் ஒன்றிணைந்ததைப் போல்ன்று தற்போதும் கைகோர்க்...
|
|