மறுசீரமைக்கும் வேலைத்திட்டம் தொடர்பில் மின்சார தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது – மின்சக்தி அமைச்சு தெரிவிப்பு!

Friday, April 21st, 2023

இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்கும் வேலைத்திட்டம் தொடர்பில் மின்சார தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் கஞ்சன விஜேசேகரவினால் அனைத்து தொழிற்சங்கங்களையும் அழைத்து இது தொடர்பான நடைமுறை தொடர்பில் குறிப்பிட்ட விளக்கமளித்ததாக மின்சக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இக்கலந்துரையாடலில் மின்துறையுடன் தொடர்புடைய 31 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டதுடன், மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கான முன்மொழிவுகளையும் அவர்கள் முன்வைத்துள்ளனர்.

சீர்திருத்தக் கட்டமைப்பைத் தயாரிப்பது தொடர்பான எதிர்கால நடவடிக்கைகளில் அந்தப் பிரேரணைகள் தொடர்பில் கவனம் செலுத்தத் தயார் என அமைச்சர் அங்கு குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, உத்தேச இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான கட்டமைப்பு, கொள்கைகள் மற்றும் பாதை வரைபடம் தொடர்பில் நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:


மாமடுவ மலையில் உள்ள வனப் பகுதி மறுபடியும் தீப்பிடித்து எரிந்துள்ளது - சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ...
வருடாந்தம் நாட்டில் 900 சிறார்கள் புற்று நோய்க்கு உள்ளாகின்றனர் - தேசிய புற்றுநோய் தடுப்புப்பிரிவின்...
ஈஸ்டர் தாக்குதல்கள் உட்பட எந்தவொரு பிரச்சினையிலும் இலங்கை சர்வதேச விசாரணையை மேற்கொள்ளாது - ஜனாதிபதி...