மனித கடத்தலை தடுக்க புதியபல நடவடிக்கைகளை எடுக்கத் திட்டம் – பாதுகாப்பு அமைச்சு!

Sunday, December 26th, 2021

மனித கடத்தலைத் தடுக்க எதிர்வரும் ஆண்டு பல நடவடிக்கைகளை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

மனித கடத்தல் தடுப்பு அதிரடிப்படையினரால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கபட்டுள்ளதாக அந்த அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனிதக் கடத்தலைத் தடுக்க புலனாய்வு அதிகாரிகள் மற்றும் புலனாய்வு அமைப்புகளுடன் நேரடி ஒருங்கிணைப்பில் வலுவான நிறுவன பொறிமுறையை நிறுவ கடந்த ஜூலை மாதம் மனித கடத்தல் தடுப்பு பணிக்குழு அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: