மதுப்பாவனை நாட்டில் வீழ்ச்சி !

Wednesday, April 12th, 2017

நாட்டின் எதிர்கால சந்ததியினரை மதுப் பயன்பாட்டிலிருந்து விடுவிப்பதற்கு அரசாங்கம் ஆரம்பித்த “போதையிலிருந்து விடுபட்ட ஒரு நாடு” எனும் வேலைத்திட்டம் வெற்றிகரமான பிரதிபலனைத் தந்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மதுபானம் மற்றும் புகையிலை என்பவற்றிலிருந்து வரும் வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளமை இதனை நிரூபிப்பதாக ஜனாதிபதி மேலும் கூறியுள்ளார்.

கண்டி தெல்தெனியவில் மாவட்ட வைத்தியசாலையின் புதிய கட்டிடத் தொகுதியினை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை வரலாற்றில் முதல்தடவையாக மதுபானம், புகையிலை என்பவற்றுக்கான வருமானம் குறைந்துள்ளது. இது மிகவும் சிறந்த ஒரு அடையாளமாகும். இதற்கு முன்னர் இந்த வருமானம் அதிகரிப்பது தான் இடம்பெற்றது. அரசாங்கத்துக்குக் கிடைக்கும் வருமானம் குறைந்துள்ளது என்பதன் அர்த்தம், மதுபானம், புகையிலை என்பவற்றின் வருமானம் குறைந்துள்ளது என்பதாகும் எனவும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts: