மதத்துக்காக மனித உயிரைக் கொலை செய்ய முடியாது – கா்தினால் மெல்கம் ரஞ்ஜித்!
Monday, August 12th, 2019
மதத்தை விடவும் மனித உயிர் மிகவும் பெறுமதியானது. ஆகையால் மதத்துக்காக மனித உயிரைக் கொலை செய்ய முடியாதென கா்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சமகால உலகிலுள்ள மனிதர்கள், உயிரை மதிக்காமல் நடந்துகொள்கின்றனர். கொலை செய்வதெல்லாம் சாதாரண விடயமாக ஒருசிலர் கருதுகின்றனர்.
ஆனால் கொலை செய்வதுதான் மிகப்பெரிய பாவமாகும். அவ்வாறு நடந்து கொள்பவர்களை கடவுளின் படைப்பு என்றே கூறமுடியாது” என கா்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
Related posts:
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவு செய்யுங்கள் - வடக்கு மாகாணசபையில் ஈ.பி.டி.பி. உறுப்பினர் தவ...
2018 ஆம் ஆண்டில் போதைப்பொருள் சுற்றிவளைப்புகளில் 95,797 பேர் கைது!
பண்ணை பாலத்தில் தவறி கடலில் வீழ்ந்தவர் சடலமாக மீட்பு!
|
|
|


