மண்ணெண்ணெய் விநியோகத்தின் போது நாள் ஒன்றுக்கு ஒருவருக்கு அதிகபட்சமாக 5 லீற்றர் மண்ணெண்ணெய் மாத்திரமே விநியோகிக்கப்பட வேண்டும் – வெளியானது சுற்றறிக்கை!

Saturday, May 7th, 2022

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் சந்தைப்படுத்தல் பணியகம் விசேட சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

மண்ணெண்ணெய் விநியோகத்தின் போது நாள் ஒன்றுக்கு ஒருவருக்கு அதிகபட்சமாக 5 லீற்றர் மண்ணெண்ணெய் மாத்திரமே விநியோகிக்கப்பட வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பீப்பாய்கள் மற்றும் கொள்கலன்களுக்கு எரிபொருளை வழங்க கூடாது என குறிப்பிட்டு இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைக்கு மேலதிகமாக இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் நுகர்வோருக்கு மண்ணெண்ணெய் வழங்கும் போது, கடற்றொழில் மற்றும் நீரியல்வளத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட செலுபடியாகும் கடிதத்திற்கு அமைய அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப மண்ணெண்ணெய் வழங்க முடியும்.

இல்லையெனில், இதற்கு பின்னர் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து மண்ணெண்ணெய்யை பெற்றுக் கொள்ள முடியாது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

000

Related posts:


அதிக பணிச்சுமை - தாதியர்களுக்கு பாரிய அசௌகரியம் - அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம் சுட்டிக்காட்டு!
பயிரிடப்படாத நிலங்களை அரசுடமையாக்குவதற்கான சட்டவரைவில் திருத்தம் - விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அறி...
அதிகாரத்தைக் கைப்பற்ற சில குழுக்கள் முயற்சி : தேசியக் கட்சியின் பிரதி தலைவர் ருவான் விஜயவர்தன குற்றச...