மண்ணுலகில் இருந்து விடைப் பெற்றார் முதல்வர் ஜெயலலிதா!
Tuesday, December 6th, 2016
சென்னை மெரினாக் கடற்கரையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் சந்தனப் பேழையில் வைத்து நல்லடக்கம் செய்யப்பட்டது.
அவரது உடன் பிறவா சகோதரி சசிகலா இறுதி மரியாதை செய்ய ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபன் ஜெயகுமார் வைதீக சடங்குகள் செய்தார். ராஜாஜி அரங்கில் இருந்து மெரினா கடற்கரைக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு எம்.ஜி.ஆர். சமாதி அருகே அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
வெற்றித் தாரகையக இரும்பு மனுஷியாக தமிழகத்தில் உலா வந்த மக்களின் முதல்வர் ஜெயலலிதா இன்றுடன் மண்ணுலகில் இருந்து விடைப் பெற்றார்.

Related posts:
அரச அதிகாரிகளுக்கான தொலைபேசி கொடுப்பனவுகள் குறைப்பு - 5,000 ரூபா மாதாந்த கொடுப்பனவை அரச சார் நிறுவன ...
நீண்ட வரிசையில் காத்திருந்து எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கான தேவை எமுவும் இல்லை - பொதுமக்களுக்கு இலங...
யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்ட வீதிப்பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபவனி!
|
|
|


