மண்டைத்தீவு கடலில் இரு மீனவர்கள் மாயம்!
Wednesday, April 11th, 2018மண்டைத்தீவு கடலிற்கு மீன்பிடிக்கச் சென்ற இரு மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு நேற்று (10) பதிவு செய்யப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த இருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளனர். முல்லைத்தீவில் இருந்து நேற்று முன்தினம்(08) யாழ்ப்பாணம் மண்டைதீவு கடற்பரப்பில் மீன்பிடிக்க வந்துள்ளனர்.
படகில் மீன்பிடிக்கச் சென்ற வேளையில் படகு பழுதமைந்த நிலையில் நடு;க்கடலில் இருந்து தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலறிந்து கடலடிக்கு மீனவர்கள் சென்ற வேளையில் அங்கு மீனவர்களை காணவில்லை என்றும் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், மீன்பிடிக்கச் சென்ற உறவினர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் நேற்று (10) முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.
Related posts:
யாழில் அதிரடியாக 9 பேர் கைது!
வடக்கு வாழ் மக்கள் கடந்த பல வருடங்களாக முகங்கொடுத்து வரும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்’பட்...
இன்றுமுதல் மின்வெட்டு ஏற்படாது - மின்சக்தி அமைச்சு அறிவிப்பு!
|
|