மக்கள் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாகப் பின்பற்ற வேண்டும் – பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் வலியுறுத்து!

Friday, June 25th, 2021

சுகாதார நடைமுறைகளை மக்கள் கடுமையாக பின்பற்ற வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண வலியுறுத்தியுள்ளார்.

ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில் –

“சமூகத்தில் எந்த இடத்திலும் கொரோனா தொற்றாளர்கள் இருக்கக்கூடும். எனவே, வைரஸ் பரவக்கூடிய அபாயம் காணப்படுகின்றது. அந்தவகையில் சுகாதார நடைமுறைகளை மக்கள் கடுமையாக பின்பற்ற வேண்டும் எனவும் அவெர் வலியுறுத்தியுள்ளார்.

அதேநேரம் தற்போது நாட்டில் பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது. நாளாந்த நடவடிக்கைகளுக்காக வெளியில் செல்பவர்கள் அவதானமாகவே இருக்கவேண்டும்.

சமூகத்தில் எந்த இடத்திலும் தொற்றாளர்கள் இருக்கக்கூடும். அவர்களுடன் பழகுவதன் ஊடாக உங்களுக்கும் தொற்று ஏற்படலாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

எனவே, சுகாதார நடைமுறைகளை, பழக்கவழக்கங்களை உரிய வகையில் பின்பற்றுமாறு பொதுமக்களிடம் விலியுறுத்தியுள்ள அவர் அநாவசியமான முறையில் வீட்டில் இருந்து வெளியேற வேண்டும் என்றும் கொட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: