போராட்டம் என்ற போர்வையில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 80 பேர் நாட்டை விட்டு தப்பியோட்டம்!

Saturday, September 3rd, 2022

போராட்டம் இடம்பெற்ற காலத்தில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பிரபல வர்த்தகர்கள் உள்ளிட்ட 80 பேர் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றவர்கள் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த நபர்களை கைது செய்வதற்கு இன்டர்போல் போன்றவற்றின் உதவிகளும் பெற்றுக்கொள்ளப்பட உள்ளது.

தங்களுக்கு அச்சுறுத்தல் காணப்படுவதாக போலியான தகவல்களை தூதரகங்களிடம் கூறி இவர்கள் இவ்வாறு தப்பிச் சென்றுள்ளனர்.

ஜனாதிபதி மாளிகைக்குள் அத்துமீறி பிரவேசித்து புகைப்படம் எடுத்து அதனை சமூக ஊடகங்களில் பிரசூரித்த பிரபல வர்த்தகர் ஆபிரிக்காவிற்கு தப்பிச் சென்றுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்தப் போராட்டத்துடன் தொடர்புடைய சுமார் 200 பேர் வெளிநாடுகளுக்கு செல்ல தூதரகங்களிடம் விண்ணப்பம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: