போராட்டங்களின் மூலம் பொதுமக்களின் உரிமைகள் பாதிக்கப்படுகின்றன – அமைச்சர் சாகல ரட்நாயக்க!

போராட்டங்களின் மூலம் பொதுமக்களின் உரிமைகள் பாதிக்கப்படுவதாக சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
சில தரப்பினர் நடத்தும் போராட்டங்களினால் பொதுமக்கள் உரிமைகள் மீறப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என குறிப்பிட்டுள்ள அவர் சட்டம் ஒழுங்கு மதிக்கப்பட வேண்டியது அவசியமானது என தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் சட்டம் ஒழுங்கையும் நல்லாட்சியையும் நிலைநாட்டுவதில் அதிக கரிசனை கொண்டுள்ளதாக பாராளுமன்றில் நேற்றைய தினம் உரையாற்றிய போது தெரிவித்துள்ளார்.
போராட்டங்களை நடாத்துவதற்கு தனியான இடமொன்று ஒதுக்கப்பட வேண்டுமெனவும் போராட்டங்கள் நடத்தப்படுவதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்திருந்தமைக்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் சாகல ரட்நாயக்க மேற்கண்ட கருத்தை வெளியிட்டிருந்தார்.
Related posts:
சரியான அரசியல் தலைமையாக டக்ளஸ் தேவானந்தாவை மட்டுமே எம்மால் கணிப்பிட முடிந்துள்ளது - கட்சியின் பூந்தோ...
இலங்கைக்கு மேலும் 150 தொன் ஒட்சிசன் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டது - இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெ...
நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் குறைந்துள்ளது - வடக்கின் இரு மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை!
|
|