பொலிஸ் ஊடரங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில்!

Tuesday, May 14th, 2019

வட மேல் மாகாணத்தில் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கம்பஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்று காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

அத்தோடு, நாட்டின் ஏனைய பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: