பொலிஸ்துறையின் தகவல் வலையமைப்பு மீது தாக்குதல்!
Saturday, June 1st, 2019இலங்கை பொலிஸ் துறையின், பொலிஸ் நிலையங்களுக்கு இடையில் இலத்திரனியல் தகவல் பரிமாற்றங்களுக்கு பயன்படுத்தப்படும் மெய்நிகர் தகவல் வலையமைப்பு (VPN network) மீது வைரஸ் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் அவர் தெரிவிக்கையில் –
“பொலிஸ்துறையின் VPN வலையமைப்பு வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகிய போதிலும் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இது குறித்து தொழில்நுட்ப பிரிவு விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
எவ்வாறாயினும், இந்த தாக்குதலினால், வைரஸ் பாதுகாப்புடன் இருந்த கணினி வலையமைப்பு பாதிக்கப்படவில்லை என்றும், பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
G.C.E. சாதாரண தரப்பரீட்சைக்கான திகதி வெளியானது!
போரைத் தூண்டியவர்களே தண்டிக்கப்பட வேண்டும் - யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர்!
இலங்கையை கட்டியெழுப்புவதற்கான ஆரம்பம் – நத்தார் வாழ்த்துச் செய்தியில் பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவி...
|
|