பொலிஸாரின் அனைத்து விடுமுறைகளும் இரத்து !
Tuesday, June 1st, 2021நாட்டில் தற்போதுள்ள கொரோனா பரவல் அதனால் விதிக்கப்பட்டுள்ள பயணத்தடைகளை அடுத்து பொலிஸாரின் விடுமுறைகள் அனைத்தும் எதிர்வரும் ஜுன் 15 ஆம் திகதி வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண உறுதி செய்துள்ளார்.
கொரோனா பயணத்தடை, தனிமைப்படுத்தல் சட்டம், கொரோனா கட்டுப்பாட்டு செயல்களுக்கு பொலிஸாரின் சேவை மிகவும் அவசியம் என்பதால் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
இந்த அறிப்பை அடுத்து ஜூன் 14ம் திகதிவரை நாட்டில் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படுமா என்ற பொது மக்களின் சந்தேகம் மேலும் வலுவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அரிசி மீதான இறக்குமதி வரி குறைப்பு வர்த்தக மற்றும் முதலீட்டுக் கொள்கை திணைக்களம் தெரிவிப்பு!
மத்திய வங்கி பிணைமுறி மோசடி : அர்ஜுன் மஹேந்திரனுக்கு பிடியாணை!
சுகாதார நடைமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் யாழ்.நகரில் மூடப்பட்டது திரையரங்கு!
|
|