பொருளாதார நெருக்கடி – இடைநடுவில் கைவிடப்பட்ட வீட்டுத் திட்டங்களின் நிர்மாணப்பணிகள் மீண்டும் ஆரம்பம் – நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு அறிவிப்பு!

Monday, October 16th, 2023

பொருளாதார நெருக்கடி காரணமாக இடைநடுவே கைவிடப்பட்ட ஒன்பது வீட்டுத் திட்டங்களின் நிர்மாணப்பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, நடுத்தர மற்றும் உயர் நடுத்தர தரப்பினருக்காக 2 ஆயிரத்து 918 வீடுகளைக் கொண்ட திட்டத்தின் அடுத்தக்கட்ட பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, மாகும்புர, மாலம்பே, பொரலஸ்கமுவ, ஸ்டேடியம்கம, ஒருகொடவத்த, பேலியகொடை மற்றும் அனுராதபுரம் ஆகிய பகுதிகளில் இந்த 9 வீடமைப்புத் திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த வீடமைப்புத் திட்டங்களின் நிர்மாணப் பணிகள் 2021 இல் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், பொருளாதார நெருக்கடி மற்றும் ஏனைய காரணங்களால், இந்த வீட்டுத் திட்டங்களின் நிர்மாணப் பணிகள் இடைநடுவே நிறுத்தப்பட்டன.

இந்தநிலையில் மீண்டும் குறித்த நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: