பொருளாதார நிலையின் நிலையான முன்னேற்றத்துக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் இலங்கைக்கு பாராட்டு!
Sunday, May 5th, 2024
நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசட்சுகு அசகாவாவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
ஜோர்ஜியாவில் இடம்பெற்றுவரும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் 57 ஆவது வருடாந்திர மாநாட்டில் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க பங்கேற்றுள்ளார்.
அதன்போது இடம்பெற்ற இந்த சந்திப்பில் தற்போதைய பொருளாதாரம் மற்றும் செயற்திட்டத்தின் நிலையான முன்னேற்றத்துக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் இலங்கைக்கு தமது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதற்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிலையான உறுதிப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தியதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
000
Related posts:
புதிய வெளிநாட்டு இராஜதந்திரிகள் நியமனம்!
மக்கள் எதிர்பார்க்கின்ற அமைப்பு மாற்றத்தை அறிமுகப்படுத்துவதற்கான இது பொருத்தமான தருணம்- இளைஞர்கள் ஆத...
மாதத்தில் முதல் 25 நாட்களில் 143,622 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை - சுற்றுலா அபிவிருத்தி அதி...
|
|
|


