பொருளாதாரக் கொள்கைகளை செயற்படுத்தப்படும்போது மக்கள் மைய பொருளாதாரதிற்கு முன்னுரிமை – நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால்!

Saturday, August 15th, 2020

புதிய அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகளை செயற்படுத்தப்படும்போது மிகவும் பின்தங்கிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான ‘மக்கள் மைய பொருளாதாரம்’ முன்னுரிமை வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்தார்.

அத்துடன் தற்போது அந்நிய நேரடி முதலீடு குறைவு, ஏற்றுமதி வீழ்ச்சி, டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி குறைதல், தொழில்துறை பலவீனமடைதல் மற்றும் பெரும் கடன் சுமை ஆகியவற்றை அரசாங்கம் கவனத்திற்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நிதி அமைச்சில் தனது கடமைகளை உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், இந்த நிலைமை கொரோனா தொற்றின் பரவல் காரணமாகவும் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் ஸ்திரமில்லாதாக ஆட்சியினாலேயே ஏற்பட்டது என்றும் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு மக்களால் தெளிவான ஆணை வழங்கப்பட்டதாகவும், இப்போது அதை வழங்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்றும் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்தார்.

உள்ளூர் தயாரிப்புகள் உலகளாவிய சந்தையில் உள்ளவற்றுடன் இணையாக இருக்க வேண்டும். அப்போதுதான் இலங்கை தயாரிப்புகள் வெளிநாட்டு சந்தைகளில் ஊடுருவ முடியும் என்றும் இதற்கான வரி சீர்திருத்தங்கள், நாணய மற்றும் வங்கி விதிமுறைகள் மற்றும் நிதி காப்புப் பிரதிகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் இந்த இலக்கை அடைய தேவையான சூழலை நிதி அமைச்சு உருவாக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: