பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்படாது – நிதி அமைச்சர்!

Saturday, April 8th, 2017

பண்டிகைக் காலங்களில் வர்த்தக நிலையங்களில் அத்தியவசியப் பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்படாது என, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

வர்த்தக நிலையங்களில் அரிசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக, வௌியான தகவல்களின் உண்மைத் தன்மை குறித்து ஆராய புறக்கோட்டை பகுதிக்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த வேளையே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இதன்போது, அங்கிருந்த வர்த்தகர்களிடம் அமைச்சர் விசாரணை செய்த சந்தர்ப்பத்தில், அரிசிப் பற்றாக்குறை எதுவும் நிலவவில்லை என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மேலும், இதன்போது அமைச்சர் ரிஷாட் பதியூதினும் உடனிருந்ததாக, கைத்தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Related posts:

13 ஆவது திருத்தச்சட்டத்தின் அத்திவாரமிட்ட பெருமை பொன் சிவகுமாரனையே சாரும் -  பிரபல சட்டத்தரணி முடியப...
மீள் மதிப்பீட்டிற்காக விண்ணப்பங்கள் பொறுப்பேற்கும் நடவடிக்கைகள் நிறைவு - பரீட்சைகள் திணைக்களம்!
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்பாக வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் - மின்சக்தி மற்றும் எரிசக்த...

வனவளத் திணைக்களத்தினரின் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம் – திலீபனின் எ...
இந்திய நிதி அமைச்சர் - இலங்கை உயர்ஸ்தானிகர் இடையே சந்திப்பு - கடன் மறுசீரமைப்பிற்கான உத்தரவாதத்தை வழ...
எவரையும் கைவிடாத வகையில் அஸ்வெசும திட்டத்தை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்து!