பொது மக்கள் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்து!

Monday, May 9th, 2022

பொது மக்கள் நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த விடயம் குறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், “இலங்கையில் உணர்ச்சிகள் அதிகமாக இயங்கிக்கொண்டிருக்கும் வேளையில், நமது பொது மக்கள் நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

வன்முறை வன்முறையைத் தூண்டும் என்பதை நினைவில்கொள்ளுங்கள். நாம் இருக்கும் பொருளாதார நெருக்கடிக்கு ஒரு பொருளாதார தீர்வு தேவை, அதை தீர்க்க இந்த நிர்வாகம் உறுதிபூண்டுள்ளது” என பதிவிட்டுள்ளார்.

இதனிடையே

அலரி மாளிகை கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீது பழி சுமத்தவே போராட்டக்காரர்கள் தாக்கப்பட்டனர் என பிரதமர் ஊடகப்பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.

அலரி மாளிகையில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீது பழி சுமத்துவதற்காக பிறிதொரு தரப்பினர் காலி முகத்திடல் போராட்ட களத்திலும், அலரி மாளிகை முன்பாகவுள்ள போராட்ட களத்திலும் தாக்குதலை மேற்கொண்டுள்ளார்கள் எனவும் பிரதமர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

000

Related posts: