பொதுமக்களின் அசமந்தப்போகே நாடு இன்று பாரிய அபாயத்தைச் சந்திக்க நேரிடக காரணம் – இராணுவ தளபதி குற்றச்சாட்டு!

Sunday, May 16th, 2021

பொதுமக்களின் அசமந்தப்போக்கின் காரணமாகவே ‘புத்தாண்டுக் கொத்தணி’ உருவாகி நாடு இன்று அபாயத்தைச் சந்தித்துள்ளது என்று குற்றம்சாட்டியுள்ள கொரோனாத் தடுப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா, இந்தக் கொரோனாக் கொத்தணியை கட்டுப்படுத்துவதில் தாமதம் ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

தற்போதைய கொரோனா நிலவரம் தொடர்பில் தகவல் வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –

இலங்கையில் கொரோனா தொற்று கட்டுமீறிப் போய்விட்டது. பொதுமக்களின் அசமந்தப்போக்கால்தான் ‘புத்தாண்டுக் கொத்தணி’ உருவாகி நாடு இத்தகைய அபாயத்தைச் சந்தித்துள்ளது, இந்தக் கொரோனாக் கொத்தணியை உடனடியாகக் கட்டுப்படுத்த முடியாது.

இந்நிலையில், பயணக் கட்டுப்பாட்டு விதிகளை மீறாத வகையில் மக்கள் செயற்பட வேண்டும். நிலைமை மோசமடைந்தால் கட்டுப்பாடுகளை நாம் மென்மேலும் இறுக்க வேண்டிய நிலை உருவாகும் என்றுமு; தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் நேற்றும் 2 ஆயிரத்து 386 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்த இராணுவத் தளபதி கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 40 ஆயிரத்து 471 ஆக அதிகரித்துள்ளது என்றும் குறிப்பிட்டிரந்தார்.

அதேவேளை, கொரோனாத் தொற்றிலிருந்து ஒரு இலட்சத்து 17 ஆயிரத்து 220 பேர் குணமடைந்துள்ளனர் எனவும், 22 ஆயிரத்து 310 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ள  அரச தகவல் திணைக்களம் இதுவரை 941 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

Related posts: