பொதுப் போக்குவரத்துகளைத் மாணவர்கள் தவிர்க்க வேண்டும் – வடக்கு கல்வி அமைச்சின் செயலாளர் கோரிக்கை!

Sunday, November 22nd, 2020

பாடசாலைகள் எதிர்வரும் 23 ஆம் திகதி திங்கட்கிழமை மீள ஆரம்பமாகவுள்ள நிலையில் மாணவர்கள் பாடசாலைக்குச் செல்லும் போதும் வீடு திரும்பும் போதும் பொதுப் போக்குவரத்துச் சேவைகளைத் தவிர்க்குமாறு தெரிவித்துள்ள வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன்  தனியான வாகனங்களில் போக்குவரத்தை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

பொதுப் போக்குவரத்தில் பலதரப்பட்டவர்களும் பயணம் செய்வதால் தேவயைற்ற அசௌகரியங்கள் ஏற்படாத வகையில் முன்எச்சரிக்கையாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தமது நலன் கருதி இயலுமானவரைப் பொதுப் போக்குவரத்தைத் தவிர்ப்பது நன்மை பயக்கும்.

தேசிய கோரோனா தடுப்புச் செயலணியின் தீர்மானத்தின் பிரகாரம் தரம் 6 – 13 வரையான மாணவர்களுக்காகவே பாடசாலைகள் முதல்கட்டமாக ஆரம்பமாகவுள்ளன. தொடர்ந்து நிலமை ஆராயப்பட்டு மேற்கொள்ளப்படும் தீர்மானத்துக்கமைவாக தரம் 1- 5 வரையான ஆரம்பப் பிரிவுகள் ஆரம்பமாகவுள்ளன.

எனவே தற்போதைய நிலவரத்துக்கமைய குறிப்பிட்ட தரங்களைச் சேர்ந்த மாணவர்களே பாடசாலைகளுக்குள் அனுமதிக்கப்படுவர். இந்த நடைமுறை அரச மற்றும் தனியார் பாடசாலைகள் என அனைத்து பாடசாலைகளுக்கும் பொருந்தும், எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: