பொதுத் தேர்தல்: இன்றுமுதல் வேட்புமனு கையேற்பு – தேர்தல்கள் ஆணைக்குழு!
Thursday, March 12th, 2020
அடுத்த மாதம் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான வேட்புமனு கையேற்பு இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
குறித்த காலப்பகுதியில் வேட்புமனு தாக்கல் செய்யப்படும் இடங்களிலும் விசேட பாதுகாப்பு, போக்குவரத்து கட்டுப்பாடு என்பனவற்றை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதற்கு பிரிவுகளுக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரிகளுக்கு, பதில் பொலிஸ் மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
மேலும் எதிர்வரும் 19 ஆம் திகதி நள்ளிரவு 12 மணிவரை 22 மாவட்ட செயலகங்களிலும் வேட்புமனு கையேற்பு இடம்பெற உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
Related posts:
இரு கட்டங்களில் தனியார் துறையினருக்கு சம்பள அதிகரிப்பு!
சதொச ஊடாக சலுகை விலையில் பொருட்களை வழங்க அனுமதி!
இலங்கைக்கு 150 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்க உலக வங்கி இணக்கம் !
|
|
|


