இலங்கைக்கு 150 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்க உலக வங்கி இணக்கம் !
Wednesday, December 6th, 2023இலங்கைக்கு 150 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்க உலக வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது.
இன்று (06) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் பந்துல குணவர்தன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் வைப்புத்தொகை காப்புறுதித் திட்டம், மறுமூலதனமாக்கல் மற்றும் மத்திய வங்கியின் திறனைக் கட்டியெழுப்புதல் மற்றும் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் ஆகிய கூறுகளின் கீழ் இந்தக் கடன் வழங்கப்பட உள்ளது.
இதன்படி, ஜனாதிபதி சமர்ப்பித்த பிரேரணை, உரிய பிரேரணையை எட்டுவதற்காக அமைச்சர்கள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும் கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
உமா ஓயா திட்டத்தின் பாதிப்புக்களை குறைக்க விசேட திட்டம்!
உடனடியாக தமிழிலும் மொழிப்பெயர்ப்பு செய்ய நடவடிக்கை – அரசாங்கம்!
நாடாளுமன்றம் எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை கூடும் - நாடாளுமன்றத்தின் பதில் செயலாளர் ...
|
|