பொதுசுகாதார அதிகாரிகளின் அலுவலகங்களுக்கு மேலதிக வாகனங்களை வழங்க சுகாதார அமைச்சு தீர்மானம்!

Tuesday, April 28th, 2020

கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பொதுசுகாதார அதிகாரிகளின் அலுவலகங்களுக்கு மேலதிக வாகனங்களை வழங்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

கொரோனா ஒழிப்பு தொடர்பான விசேட நடவடிக்கைகள் அலுவலகத்தின் குழு இன்று சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சியின் தலைமையில் ஒன்று கூடியபோது இந்த தீர்மானத்தை மேற்கொண்டது

தற்போது நாட்டில் கொரோனா பரவல் வேகம் அதிகரித்து வருகின்ற நிலையில், அதனைக் கட்டுப்படுத்துவதற்கான மேலதிக வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் இந்த கூட்டத்தின் போது அவதானம் செலுத்தப்பட்டது.

அத்துடன் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் பொதுமக்கள் சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றுகின்ற முறைமைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: