பேஸ்புக் பாவனையாளர்களுக்கு எச்சரிக்கை!

Tuesday, July 17th, 2018

ஈ-மெயில் மற்றும் பேஸ்புக் ஊடாக வருகின்ற தகவல் ஒன்றின் மூலம் அவற்றின் கடவுச் சொற்களை திருடுகின்ற நடவடிக்கையொன்று இடம்பெற்றுவருகின்றது.

எனவே, இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு கணினி அவசர சேவை சபை கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த தகவலை திறக்கும் போது மீண்டும் கடவு இலக்கம் கோரப்படும். அதனை பதிவிடும்போது வேறொரு தரப்பினரால் அந்த கடவுச் சொற்கள் திருடப்படுவதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

எனவே முடிந்தளவிற்கு அத்தகைய தகவல்களை திறப்பதை தவிர்க்குமாறு சபை கோரிக்கை விடுத்துள்ளது.

Related posts: