பேருந்து கட்டண குறைப்பு தொடர்பான கலந்துரையாடலை ஒத்திவைக்குமாறு கோரிக்கை!

Tuesday, December 18th, 2018

எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டதற்கு நிகராக பேருந்து கட்டணங்கள் திருத்தம் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் 21ஆம் திகதி இடம்பெறவிருந்த நிலையில், குறித்த கலந்துரையாடலினை 07 நாட்களுக்கு பிற்போடுமாறு, பேருந்து சங்கங்கள், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நிலவும் அரசியல் மாற்றங்கள் காரணமாக குறித்த கலந்துரையாடலை ஒத்திவைக்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் கோரியுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்திருந்தார்.

Related posts: